தி டாவின்சி கோட் படத்துக்கு தமிழகத்தில் தடை
சென்னை:
தி டாவின்சி கோட் படத்தை திரையிட்டால் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனம் புண்படும்என்பதாலும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படலாம் என்பதாலும், இப்படத்தைத்திரையிடாமல் நிறுத்தி வைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழகஅரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,தி டாவின்சி கோட் திரைப்படத்தை வெளியிடுவதால் தங்களது மனம் புண்படும்படிபல்வேறு மதத்தினர் குறிப்பாக கிறிஸ்தவ சமுதாயத்தினர் அரசிடம்முறையிட்டுள்ளனர். அவற்றை தமிழக அரசு கவனத்துடன் பரிசீலனையில் எடுத்துக்கொண்டுள்ளது.
இந்தப் படம் திரையிடப்பட்டால் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்இருக்கும் என்பதாலும், அமைதிக்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் போராட்டங்கள்,சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதாலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்தங்களது மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலையை உன்னிப்பாக கவனித்து வரவேண்டும்.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து, சினிமாட்டோகிராப் சட்டத்தின் 13வது பிரிவின்கீழ் இப்படம் திரையிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.
இந்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சென்னை மாநகரகாவல்துறை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என பேராயர் எஸ்றா சற்குணம் நேற்றுமுதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications