வரும் சனிக்கிழமை முதல் 2 ரூபாய் அரிசி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருகிற சனிக்கிழமை முதல் ரேஷன் கடைகளில் அரிசி கிலோ 2 ரூபாய்க்குவழங்கப்படும். இத்திட்டத்தின் தொடக்க நாளன்று ரேஷன் கடைக்கு அரிசி வாங்கவருவோருக்கு லட்டுகள், இனிப்புகள் வழங்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.(அல்வா குடுக்காதவரைக்கும் ஓகே!)

திமுகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான 2 ரூபாய்க்கு ஒரு கிலோ ரேஷன்அரிசித் திட்டம் ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் முதல் அமலுக்குவருகிறது.

இதற்காக தமிழக அரசு சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.அதேபோல திமுகவினரும் பல்வேறு ஏற்பாடுகளை தடபுடலாக செய்துவைத்துள்ளனர்.

தாம்பரம் பகுதி திமுகவினர், தங்களது பகுதிக்குட்பட்ட அனைத்து ரேஷன்கடைகளிலும், 3ம் தேதி அரிசி வாங்கவருவோருக்கு லட்டுகள் வழங்க ஏற்பாடுசெய்துள்ளனர். மேலும் ரேஷன் கடைகள் முன்பு மைக் செட் கட்டி பாடல்களைஒலிபரப்பி அமர்க்களப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முதல்வர் கருணாநிதி ஜூன் 3ம் தேதி காலை 8 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ளரேஷன் கடையில் 2 ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

முதல் வாடிக்கையாளருக்கு அவரே தனது கையால் அரிசியை அளந்துகொடுக்கவுள்ளார். ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் 84வது பிறந்த நாள் என்பதால்திமுகவினர் படு உற்சாகமாக உள்ளனர்.

அன்றைய தினம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட உழவர்சந்தைகளும் திறந்து வைக்கப்படவுள்ளன. மேலும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்மகளிர் திருமண உதவித் திட்டம் அன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

இதுவரை ரூ. 10,000 வழங்கப்பட்ட நிதி சனிக்கிழமை முதல் ரூ. 15,000 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+