இன்று 102 அகதிகள் வருகை-ஐவர் தப்பியோட்டம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து இன்று 37 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் அகதிகளாகதமிழகம் வந்தனர்.
இதற்கிடையே நேற்று வந்த அகதிகளில் 5 பேர் தப்பி ஓடியதால் ராமேஸ்வரத்தில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கையில் போர்ச் சூழல் அதிகரித்து வருவதால் அங்கிருந்து தினசரி ஏராளமானதமிழர்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். இன்று 37 குடும்பங்களைச் சேர்ந்த102 பேர் அகதிகளாக வந்தனர். இவர்களில் 38 பேர் பெண்கள்.
இவர்கள் அனைவரும் 6 படகுகளில் தனுஷ்கோடி வந்தனர். அவர்களிடம் விசாரணைநடத்திய பின்னர் போலீஸார் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, நேற்று ராமேஸ்வரம் வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 அகதிகள்தங்களைப் பதிவு செய்து கொள்ளாமல் போலீஸாார ஏமாற்றி விட்டு தப்பிவிட்டனர்.












Click it and Unblock the Notifications