அரங்கநாயகம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அரங்கநாயகம், கு.லாரன்ஸ் ஆகியோர் மீதுகிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் இருவரது வழக்குகளிலும் விசாரணை தொடங்கவுள்ளது. எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா தலைமையில் அமைந்த முதல் அதிமுக அரசில்அமைச்சர்களாக இருந்தவர்கள் அரங்கநாயகம், லாரன்ஸும். கல்வித்துறைஅமைச்சராக இருந்த அரங்கநாயகம் மீது பின்னர் வந்த திமுக ஆட்சியில்வருமானத்திற்கு அதிகமாக ரூ. 92 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்குதொடரப்பட்டது.

இந்த வழக்கில் அரங்கநாயகம், அவரது மனைவி மற்றும் 2 மகன்களும்சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு இத்தனை காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.தற்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

இவ்வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 185சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தனி நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்திகுற்றப்பத்திரிக்கையை ஏற்றுக் கொண்டார். வருகிற 13ம் தேதி முதல் விசாரணைதொடங்கும் என அவர் அறிவித்துள்ளார்.

இதேபோல வனத்துறை அமைச்சராக இருந்த லாரன்ஸ் மீது கடந்த 1997ம் ஆண்டுசொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் ரூ. 30 லட்சம் அளவுக்கு சொத்துசேர்த்ததாக லாரன்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதிலும் தற்போதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை 12ம் தேதிதொடங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+