டாவின்சி கோட்: கருணாநிதிக்கு பாஜக கண்டனம்
சென்னை:
தி டாவின்சி கோட் பட விவகாரம் தொடர்பாக திமுக இரட்டை வேடம் போடுகிறதுஎன பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தி டாவின்சி கோட்திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கிறிஸதுவ நாடுகளும் அடங்கும். அங்கெல்லாம்இப்படத்தை திரையிடக் கூடாது என யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் கூட இதை எதிர்க்கவில்லை.தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே இப்படம் தடைசெய்ப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இருகட்சிகளும் இரட்டை வேடம் போடுகின்றன.
தமிழகத்தில் மீண்டும் பாஜக நல்ல நிலையை அடையும். அதற்கான வலிமைஎங்களிடம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அதை சந்திக்க பாஜகவினர்தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
சட்டசபைத் தேர்தலில் 220 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தமுடிந்தது. 6 மாதத்தில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.
இலவச அறிவிப்புகளை இந்த அரசால் நிச்சயம் நிறைவேற்ற முடியாது. எனவேஅதுதொடர்பான போராட்டத்திற்குப் பாஜகவினர் தயாராக இருக்க வேண்டும்.
பாதயாத்திரை, ஆர்ப்பாட்டம், சிறை நிரப்புதல், மறியல் ஆகிய போராட்டங்களைநடத்தினால்தான் கட்சியை பலப்படுத்த முடியும்.
சோனியா காந்திக்கென கொண்டு வரப்பட்ட சிறப்பு சட்ட மசோதாவை குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பி விட்டார்.
இது காங்கிரஸ் அரசுக்கு மிகவும் கேவலம். மக்களின் உணர்வுகளை காங்கிரஸுக்குஎதிராக இருப்பதை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும். எனவேஇந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதை மத்திய அரசு கைவிடும் என்றுநம்புகிறேன் என்றார் நாயுடு.