வானவெடி விபத்தில் 2 பேர் சாவு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வானவெடிகள் வெடித்ததில் 2 பேர் கருகிஇறந்தனர்.
சென்னிமலை அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி.இவரது மனைவி முத்தம்மாள். தங்களது வீட்டுக்கு எதிரே திருவிழாவில்பயன்படுத்தப்படும் வான வெடிகளைத் தயாரித்து வருகிறார்கள்.கடந்த 7 ஆண்டுகளாக இந்த வானவெடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.வெள்ளக்கோவிலைச் சேர்ந்த குருசாமி, அவரது மனைவி சுமதி ஆகியோர்வானவெடித் தயாரிப்பில் ராமசாமி தம்பதிகளுக்கு உதவி வந்தனர்.
இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். சுமதியும், குருசாமியும் வான வெடிகளைத்தயராகிக் தொழில் கூடத்திற்கு சனிக்கிழமை காலை சென்று விட்டனர்.
மாலை 6 மணிவாக்கில் வேலையை முடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குசுமதியின் அண்ணன் மகன் ரவி அங்கு வந்தார். அவருடன் குருசாமியும், சுமதியும்பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வானவெடிகள்பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் ரவியும், சுமதியும் தீயில் கருகி சம்பவஇடத்திலேயே பலியாயினர். குருசாமி பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.