தமிழ் கட்டாய பாடம்: கருணாநிதிக்கு நன்றி
சென்னை:
பத்தாம் வகுப்பு வரை தமிழ் காட்டாயப் பாடம் ஆக்கிய முதல்வருக்கு பல்வேறு அமைப்புக்களும் முதல்வருக்குநன்றி தெரிவித்துள்ளன.
இதுபற்றி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில்:இந்த சட்டத்தின் மூலம் இனி எவரும் தமிழைக் கற்காமல் தமிழ் நாட்டிலுள்ள கல்வி நிலையங்களில் எந்தப்பட்டத்தையும் பெற முடியாது என்ற நிலையை உருவாக்கிய முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
உலக தமிழ் எழுத்தாளர் பேரவை தலைவர் அ.மறைமலையான் கூறுகையில்:
தமிழ் அன்னைக்கு வலிமை சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ள முதல்வருக்குமனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோன் என கூறியுள்ளார்.
கலைஞர் தமிழ்ப் பேரவை மாநில இணைச் செயலாளர் மகாலட்சுமி கூறுகையில்:
தாய்மொழியை கற்று மாணவ, மாணவிகள் மனவளம் பெற்றிடும் வகையில் தமிழ் கட்டாயப் பாடமாக்கும் சட்டமுன் வடிவை சட்டசபையில் நிறைவேற்றிய முதல்வருக்கு எங்கள் வணக்கத்தையும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.