தமிழகம் முழுவதும் கேப்டன் சுற்றுப்பயணம்
சென்னை:
தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். நாளை இந்தசுற்றுப்பயணம் தொடங்குகிறது.
விஜயகாந்த்தின் தேமுதிக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட்டது. இதில் விஜயகாந்த்துக்கு மட்டுமே வெற்றி கிடைத்தது.ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றாலும் கூட தமிழக அரசியல் வரலாற்றிலேயேமுதல் முறையாக சிறுபான்மை அரசு ஏற்பட விஜயகாந்த் கட்சி வழி ஏற்படுத்திவிட்டது. இதனால் தமிழக மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் விஜயகாந்த் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.
தனது கட்சிக்குக் கிடைத்துள்ள பெரும் வரவேற்பினால் சந்தோஷம்அடைந்திருப்பதாக கூறியுள்ள விஜயகாந்த், உள்ளாட்சித் தேர்தலில் 1 லட்சம்வேட்பாளர்களை தனது கட்சியின் சார்பில் களம் இறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தமிழகசுற்றுப்பயணத்தை விஜயகாந்த் மேற்கொள்ளவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போதுகட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
நாளை கன்னியாகுமரியிலிருந்து தனது சுற்றுப்பயணத்தை விஜயகாந்த்தொடங்குகிறார். குமரி, நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும்விஜயகாந்த் தொடர்ந்து, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை,தேனி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்கிறார்.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல், கரூர், நீலகிரி, காவை, நாமக்கல், சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும்செல்கிறார்.
தினசரி 2 மாவட்டங்களுக்கு அவர் செல்கிறார். கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல்தொடர்பான ஆலோசனையில் ஈடுபடும் அவர் கட்சி வளர்ச்சிப் பணி குறித்தும்விவாதிக்கிறார். உறுப்பினர் சேர்க்கையையும் இந்த பயணத்தின்போது முடுக்கிவிடவுள்ளார்.












Click it and Unblock the Notifications