தலைநகர பயணம் சுபம்-கருணாநிதி சொல்கிறார்
சென்னை:
தனது டெல்லி பயணம் சுபமாக முடிந்ததாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
2 நாள் டெல்லி பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் கருணாநிதி நேற்று இரவுசென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், தமிழகத் திட்டப் பணிகளுக்கு ரூ. 12,500 கோடி கிடைத்துள்ளது. இதுமிகவும் சந்தோஷமான செய்தி. காரணம் தமிழகத்திற்கு இதுவரை இந்த அளவுஅதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில்லை.திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்ற சிறப்பு நிதி தேவைஎன்று கோரியுள்ளோம். இதுகுறித்து உரிய முறையில் பரிசீலிப்பதாக மத்தியஅரசுகூறியுள்ளது.
தமிழகத்திற்கு மாதந்தோறும் ஒதுக்கப்படும் மண்ணெண்ணையின் அளவை 6000கிலோ லிட்டரிலிருந்து 16,000 கிலோ லிட்டராக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தமிழக ரயில் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் உறுதியளித்துள்ளார்.
சென்னை, மேட்டூரில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரு அணல் மின்நிலையங்களை அமைக்க மாநில அரசுக்கு மத்திய அரசு உதவும் என மத்தியமின்துறை அமைச்சரும் உறுதியளித்துள்ளார் என்றார் கருணாநதி.
உங்களது கோரிக்கைகளுக்குப் பிரதமர் என்ன ரியாக்ஷன் காட்டினார் என்றுகேட்டபோது, எனது கோரிக்கைகளுக்கு நிதி அமைச்சர் ப.சிதம்பரம் முன்னுரைஎழுதினார். அதை சோனியா காந்தி வழிமொழிந்தார். பிரதமர் முடித்து வைத்தார்என்றார் கருணாநிதி.
தொடர்ந்து செய்தியாளர்கள், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளைஇந்தியாவிலேயே சென்னையில் உள்ளவர்கள் மட்டும்தான் பார்க்க முடியாது என்றநிலை உள்ளது.
செட் டாப் பாக்ஸ் திட்டத்தால் கால்பந்துப் போட்டிகளை பார்க்க முடியாத நிலைஉள்ளது. எனவே ரசிகர்களின் நலனுக்காக சன் டிவியின் ஏதாவது ஒரு சானல் மூலமாககால்பந்துப் போட்டிகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுப்பீர்களா, கலாநிதி மாறனிடம்இதுதொடர்பாக பேசுவீர்களா என்று கேட்டபோது, தயாநிதி மாறன் சொல்வதையேகலாநிதி கேட்க மாட்டார் என்று சிரித்தபடி கருணாநிதி பதிலளித்தார்.
ஆனாலும் விடாமல் தொடர்ந்து சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, தேவைப்பட்டால்இலவச கேபிள் இணைப்பும் தருவோம் என்றெல்லாம் கூறினீர்களே என்றுசெய்தியாளர்கள் கேட்டபோது, தவறான கவரிக்கு வந்து நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்என்று கூறியபடி அங்கிருந்து கிளம்பி விட்டார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications