சுகோய்-30 போர் விமானத்தில் பறந்து கலாம் சாதனை!!!
புனே:
ஏற்கனவே நீர்மூழ்கியில் பயணம் மேற்கொண்ட கலாம் ரஷ்யாவின் சுகோய் போர் விமானத்தில் பறக்க விருப்பம்தெரிவித்தார். இதையடுத்து இந்திய விமானப் படையின் சுகோய் 30- எம்கேஐ ரக போர் விமானத்தில் அவர்பறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஒலியை விட இரு மடங்கு வேகத்தில் பறக்கும் இந்த விமானத்தில் பயணிக்க கலாமுக்கு மருத்துவபரிசோதனைகள் நடந்தன. போர் விமானத்தில் பறக்கும் அளவுக்கு கலாம் பிட்ஆக இருப்பதாக மருத்துவர்கள்தெரிவித்தனர். அவருக்கு வயது 75 என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இன்று கலாமின் கனவுப் பயணம் அரங்கேறியது. புனே நகரில் உள்ள லொகேகான் விமானப்படைத் தளத்தில் இருந்து சுகோய் விமானத்தில் கலாம் பயணித்தார். விமானிகள் அணியும் ஜி சூட் அணிந்துமிகவும் ஆர்வத்துடன் கலாம் சுகோயில் சென்றார்.
சுகோய் ஸ்கூவாட்ரன் பிரிவின் கமாண்டிங் ஆபிசர் விங் கமாண்டர் அஜய் ரத்தோர் விமானத்தை இயக்கிச்சென்றாார். ஒலியின் வேகத்தை விட அதிகமாக வேகத்தில் விமானத்தை இயக்கிய விமானி, சுகோயின்தொழில்நுட்பங்களை கலாமுக்கு விளக்கினார். விமானிக்குப் பின்னால் கோ-பைலட் இருக்கையில் அமர்ந்தபடிகலாம் சுகோயின் திறன்களை நேரில் கண்டு உணர்ந்தார்.
இதன் மூலம் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை கலாம் பெற்றுள்ளார்.
25,000 அடி உயரத்தில் (சுமார் 8 கி.மீ) சுமார் 30 நிமிடங்கள் வானில் சுற்றிய கலாம் தரையிறங்கியபோதுஅவருக்கு விமானப் படையினர் மிகச் சிறப்பான வரவேற்பளித்தனர்.
வெற்றிவேல்..
சுகோயின் இந்திய ரக விமானத்துக்கான (சுகோய் 30 எம்கேஐ- இதில் ஐகுறிப்பிடுவது இந்தியாவை) கம்ப்யூட்டர் கண்ட்ரோல் சாப்ட்வேரைஉருவாக்கியது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பாதுகாப்புஆராய்ச்சி மையத்தில் (டிஆர்டிஓ) தான் இந்த விமானத்துக்கான ஏவியானிக்ஸ்உருவானது.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் வெற்றிவேல் என்ற ரகசிய பெயரில் இந்தசாப்ட்வேர் எழுதப்பட்டது. முருகப் பெருமானின் கையில் உள்ள வேலைநினைவூட்டும் வகையில் இந்த ஏவியானிக்ஸ் சாப்ட்வேருக்கு பெயர் சூட்டியது..நம்ம கலாமே தான்.
மிக் விழுந்து நொறுங்கியது:
இதற்கிடையே ஜாம்நகர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் போர் விமானம் இன்று தரையில் விழுந்துநொறுங்கியது. ஆனால், விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பிவிட்டனர்.