எழுத்தாளர் குடும்பத்துக்கு இலங்கை தமிழர் உதவி
சென்னை:
எழுத்தாளர் டி.ஜே. ரங்கநாதனின் குடும்பம் வறுமையில் வாடுவதை அறிந்தஇலங்கையைச் சேர்ந்த குலேந்திரன் என்ற தொழிலதிபர் அந்தக் குடும்பத்துக்குநிதியுதவி செய்துள்ளார்.
பல்வேறு படைப்புகளைப் படைத்தவரான ரங்கநாதனின் குடும்பம் வறுமையில் வாடிவருகிறது. இதை அறிந்த சென்னையைச் சேர்ந்த பாலம் என்ற தொண்டு நிறுவனம்ரங்கநாதன் குடும்பத்துக்கு உதவ பலரையும் அணுகியது.இதுகுறித்துத் தகவல் அறிந்த இலங்கைத் தமிழரும், சர்வதேச அகதிகள் கழகத்தின்தலைவருமான குலேந்திரன், ரங்கநாதனின் குடும்பத்துக்கு உதவ ன்வந்தார்.
முதல் கட்டமாக ரங்கநாதனின் பேத்தி அர்ச்சனாவின் படிப்புச் செலவு முழுவதையும்அவர் ஏற்றுள்ளார். அவருக்கு முதல் கட்டமாக ரூ. 7,500 நிதியை குலேந்திரன்அளித்துள்ளார். இந்த நிதியை பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அர்ச்சனாவிடம்ஒப்படைத்தார்.
தொடர்ந்து ரங்கநாதனின் குடும்பத்துக்கு உதவவும் குலேந்திரன் முன் வந்துள்ளார்.
கண்ணிவெடி தாக்குல்: ராணுவ அதிகாரி பலி
இந் நிலையில் கிழக்கு இலங்கையில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் ராணுவஅதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
இலங்கையில் தினசரி தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று கிழக்கு இலங்கையில்உள்ள மட்டக்களப்பில் டிராக்டரில் சென்று கொண்டிருந்த தமிழர்கள் மீது நடத்தப்பட்டகண்ணிவெடித் தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதே மட்டக்களப்பில், ராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் கண்ணிவெடித்தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
நார்வேயில் இன்று அமைதிப் பேச்சு தொடங்கியுள்ள நிலையில் ராணுவ அதிகாரிகொல்லப்பட்டது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொரு சம்பவத்தில் கருணா குழுவினர் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகள்தரப்பில் 15 பேர் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் கூறுகிறது. இருப்பினும் இந்தத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே, இலங்கையிலிருந்து இன்று 45 தமிழர்கள் அகதிகளாக தமிழகம்வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications