For Daily Alerts
Just In
பெரியார் அணை: கருணாநிதியுடன் பேச கேரள முதல்வர் முடிவு
திருவனந்தபுரம்:
பெரியார் அணையின் உயரத்தை அதிகரிக்கும் விவகாரம் தொடர்பாக முதல்வர்கருணாநிதியை சந்தித்துப் பேசவிருப்பதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன்தெரிவித்துள்ளார்.
முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் கேரள அரசின் அமைச்சரவைக் கூட்டம்திருவனந்தபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் அச்சுதானந்தன்செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரியார் அணை விவகாரம் தொடர்பாக தமிழகமுதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேச அமைச்சரவைக் கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டது.விரைவில் கருணாநிதியை சந்தித்துப் பேசுவேன்.
முல்லைப் பெரியார் அணை நீரை கேரளாவும், தமிழகம் பயன்படுத்தி வருகின்றன.
இரு மாநிலங்களும் பலனடைந்து வருகின்றன. இந்தப் பிரச்சினையில் கடந்த ஐக்கியமுன்னணி அரசு சுமூக தீர்வு காணாமல் நேரத்தை வீணடித்து விட்டது. எனதுஆட்சியில் இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படும் என்றார்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானிக்கு உரிய சிகிச்சைகள்அளிக்க வேண்டும் என்றும் எனது சந்திப்பின்போது கருணாநிதியிடம் கோரிக்கைவைப்பேன் என்றார் அச்சுதானந்தன்.
Comments
Story first published: Thursday, June 8, 2006, 5:30 [IST]