திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா!
திருச்செந்தூர்:
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாகத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடு திருச்செந்தூர். இங்குள்ளஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் கடந்த 31ம் தேதி வைகாசி விழாதொடங்கியது.இன்று அதிகாலை 1 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு முருகனுக்குஅபிஷேகம் செய்யப்பட்டது. அந்த அதிகாலை நேரத்திலும் லட்சக்கணக்கானபக்தர்கள் கோவிலில் குவிந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.
பல்வேறு ஊர்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வகையானகாவடிகளை எடுத்து வந்து முருகனை வழிபட்டு வருகின்றனர்.
இன்று பகல் உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் வள்ளி,தெய்வானையுடன் முருகப் பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம்தருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைகாசி விழாவையொட்டி திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications