காவல்துறையை ஆட்டிப் படைக்கும் வாஸ்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் பலர்வாஸ்துப்படி தங்களது அலுவலகத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள்,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

சென்னை மாநகர காவல்துறையில், கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகள்அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டு திமுகவுக்கு ஆதரவான அல்லதுநடுநிலையான அதிகாரிகள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

புதிய அதிகாரிகளில் பலர் வாஸ்து மீது அபார நம்பிக்கை கொண்டவர்களாகஉள்ளனர். இதனால் தங்களது அலுவலகத்தை வாஸ்து சாஸ்திரப்படி பல்வேறுமாற்றங்களை செய்து வருகின்றனர்.

சில உயர் அதிகாரிகள் தங்களது உட்காரும் திசையை மாற்றிக் கொண்டுள்ளனர். பலர்,அலுவலக அறையின் நுழைவாயிலை மாற்றியுள்ளனர். சிலரோ, பொருட்கள்இருக்கும் இடத்தையே மாற்றி வைத்துள்ளனர்.

சில உயர் அதிகாரிகளின் அறைகளில் புதிய பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.இந்திய வாஸ்து தவிர சீன நாட்டு ஃபெங் சூயி முறைப்படியும் சிலர் தங்களதுஅலுவலகத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

இதுகுறித்து ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், வாஸ்துப்படி எனது அறையைமாற்றவில்லை. எனது செளகரியத்திற்கேற்ப எனது அலுவலக அறையை வைத்துக்கொள்ளும் உரிமை எனக்கு உண்டு. அதன்படிதான் சில மாற்றங்களை செய்துள்ளேன்என்று சப்பைக் கட்டுக் கட்டினார்.

டிஜிபி அலுவலகம், ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில்பதவியேற்றுள்ள புதிய அதிகாரிகளின் அறைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள்நடந்துள்ளன.

இதுவரை இடமாற்றம் செய்யப்படாமல் தப்பிப் பிழைத்திருக்கும் சில அதிகாரிகளோ,தங்களது இடமாற்றம் வந்து விடக் கூடாது என்பதற்காக சிறப்பு யாகங்களைரகசியமாக செய்து வருகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+