அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: உயர் மட்டக் குழு அமைப்பு
சென்னை:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பானஆலோசனைகளைப் பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிதலைமையில் புதிய உயர் மட்டக் குழுவை முதல்வர் கருணாநிதி அமைத்துள்ளார்.
அனைத்து ஜாதியினரும் இந்துக் கோவில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றலாம் எனதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்குத்தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக புதிய உயர் மட்டக்குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர்கருணாநிதி பிறப்பித்துள்ளார்.அதன்படி ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் இக்குழுவுக்குத்தலைவராக இருப்பார். குழுவின் உறுப்பினர் செயலாளராக இந்து சமயஅறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, உறுப்பினர்களாக குன்றக்குடிபொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க அடிகளார், ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர்சுவாமிகள், பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம் சந்திரசேகர்பட்டர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.
அர்ச்சகராக பயிற்சி பெறுவதற்குத் தேவையான குறைந்த பட்ச கல்வித் தகுதி, வயது,பயிற்சிக்கான பாட திட்டம், கால அளவு, பயிற்சி சான்றிதழ் வகைகள், பயிற்சிநிலையங்களின் நிர்வாக அமைப்பு, பயிற்சியாளர்களுக்கு இட ஒதுக்கீடுபோன்றவற்றை இரண்டு மாதங்களுக்குள் முடிவு செய்து அரசுக்கு உரியஆலோசனைகள் வழங்கிட இந்த உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications