For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயாவுக்கு பொறாமை என்கிறார் ஆற்காடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தனது ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியைக் குறைக்க முன்வராத ஜெயலலிதா, இப்போது முதல்வர் கருணாநிதி டீசல் மீதான விற்பனை வரியைக்குறைத்துள்ளதை பாராட்டாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவது அவரது பொறாமைக்குணத்தையே காட்டுகிறது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிகூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜெயலலிதா ஆட்சியில் பலமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டபோது,விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என்று திமுக பலமுறை கோரிக்கை விடுத்தும்அதை ஜெயலலிதா அரசு புறக்கணித்தது.

தற்போது டீசல் மீதான விற்பனை வரியை முதல்வர் கருணாநிதி குறைத்துஉத்தரவிட்டுள்ளது மக்கள் மீது அவருக்கு உள்ள அக்கறையையே காட்டுகிறது.இதைப் பாராட்ட மனம் இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஜெயலலிதா கூறுவதுஅரசு மீது அவருக்கு உள்ள பொறாமைக் குணத்தையே காட்டுகிறது.

ஃபாக்ஸ்பான் தொழிற்சாலைக்கும், மோட்டோரோலா தொழிற்சாலைக்கும் இடையேஉள்ள வித்தியாசம் கூட தெரியாமல் ஜெயலலிதா தமிழக அரசைக் கண்டித்து அறிக்கைவிட்டார்.

ஆனால் அதுதொடர்பாக ஆதாரத்துடன் முதல்வர் கருணாநிதி விளக்கிக் கூறியபோதுஅதற்கு ஜெயலலிதாவால் பதில் அளிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் வீராசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X