ஆட்டோ, லாரி, டாக்சி ஸ்டிரைக்-மக்கள் அவதி
சென்னை:
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், லாரிகள், டாக்சிகள்இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள்நடந்து வருகின்றன். விலை உயர்வை ரத்து செய்யக் கோரி ஆட்டோ, டாக்சிஓட்டுனர்கள் இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதேபோல லாரிகள், மின் லாரிகள், லோட் வேன்களும் இன்று வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டன. இதனால் மாநிலம் முழுவதும் சரக்கு ஏற்றி, இறக்கும் பணிகள்முழுமையாக பாதிக்கப்பட்டன.
லாரிகள் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஓடாது. ஆட்டோ,டாக்சிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓடாது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள் இயங்காததால் சென்னை உள்ளிட்ட நகர்களில் சாலைகள் காலியாககாணப்படுகின்றன. சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் ஆட்டோக்கள் இல்லாமல் மக்கள் அல்லாடினர்.
வழக்கமாக ஆட்டோக்களில் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளும் ஆட்டோக்கள்இல்லாமல் சிரமத்துக்கு உள்ளாயினர். ஷேர் ஆட்டோக்களும் போராட்டத்தில்பங்கேற்றதால் மக்கள் பஸ்களையே சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.இதனால் பஸ்களிலும் புற நகர் மின்சார ரயில்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல்இருந்தது
லாரிகள் இயங்காததால் நெடுஞ்சாலைகளும் மார்க்கெட் பகுதிகளும் வெறிச்சோடிக்கிடக்கின்றன. லாரிப் போக்குவரத்து நிறைந்த மூல கொத்தளம், வால்டாக்ஸ் ரோடு,கோயம்பேடு ஆகிய பகுதிகள் லாரிகள் இன்றி காலியாகக் காட்சியளித்தன.
இந்த ஸ்டிரைக்கால் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள லட்சக்கணக்கான முட்டைகள்தேக்கமடைந்துள்ளன. அதே போல திருப்பூர், கோவை பகுதியில் இருந்து நூல், துணிமணிகள் ஏற்றுமதியும்பாதிக்கப்பட்டுள்ளது.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் போராட்டத்தால் சென்னைக்கு மிகக் குறைந்த அளவிலேயே காய்கறிகள்வந்திறங்கின. இதனால் சில நாட்களுக்கு காய்கறி விலை தாறுமாறாக உயரும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications