மாவோயிஸ்ட் தலைவருக்கு 3 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நேபாள மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சந்திரபிரகாஷ் கஜூரேவுக்கு சென்னைஆலந்தூர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
நேபாள நாட்டைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவரான சந்திரபிரகாஷ்கஜூரே கடந்த 2003ம் ஆண்டு சென்னையிலிருந்து லண்டனுக்கு போலி பாஸ்போர்ட்மூலம் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.போலி பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர் கைதுசெய்யப்பட்டார்.
அவர் மீது ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நலுவையில்இருந்து வந்தது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, கஜூரேவுக்கு 3 ஆண்டுசிறைத் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி தர்மராஜ்உத்தரவிட்டார்.
அவர் சிறையில் கழித்த 2 ஆண்டு 10 மாத காலத்தை தண்டனைக் காலமாக கருதவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications