உவமைக் கவிஞர் சுரதா கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படும் கவிஞர் சுரதா கவலைக்கிடமான நிலையில்உள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் மீது தீராத பற்று கொண்டவர் சுரதா (சுப்புரத்தின தாசன்).பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்ற பெயருடன் தாசன் என்பதைஇணைத்து தனது பெயராக வரித்துக் கொண்டார்.பல்வேறு திரைப்பாடல்களை எழுதியுள்ள சுரதா, நூற்றுக்கணக்கான கவிதைகளையும்படைத்துள்ளார்.
சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்தார் சுரதா. அவரது சிகிச்சை செலவுக்காகதனது சொந்த செலவிலிருந்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் ரூ. 50,000 நிதியுதவிஅளித்திருந்தார்.
இந்த நிலையில் சுரதாவின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் போரூரில்உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுஅனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரதாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவருக்கு தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications