டிஜஜி அலுவலகத்தில் போலீஸ் ஏட்டு தற்கொலை
நெல்லை:
![]() |
நெல்லை டிஜஜி அலுவலகத்தில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை டிஜஜியான மாகாளி அலுவலத்தில் உள்ள அவரது பங்களாவில் பாதுகாப்பு பணிக்காக ஆயுதப்படைபோலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பணியாற்றி வந்த ஏட்டு செல்வராஜ் இன்று அதிகாலை அலுவலகத்தின் அருகே உள்ள காவலர் ஓய்வுஅறை அருகே தனது 303 ரைபிளை நெற்றியில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்த போலீஸ் ஏட்டு செல்வராஜின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக பாளை அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
செல்வராஜின் சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக கூடங்குளம் காவல் நிலையத்தில்ஏட்டாக பணியாற்றி வந்தார். அப்போது பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி இவரை நெல்லைஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதனால் இவர் கடந்த 11ம் தேதி தான் ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தார். நேற்று காலை தான் டிஜஜிஅலுவலக பணியில் இவர் ஈடுபடுத்தப்பட்டார்.
அப்போது அங்கு வேலை பார்த்த சக போலீசாரிடமும் செல்வராஜ் பேசாமலேயே இருந்துள்ளார். யாரவதுஏதாவது கோட்டால் மட்டுமே பதில் கூறியுள்ளார். அவரை பற்றி அவருடன் பணியாற்றிய போலீசார் சிலரிடம்கேட்ட போது அவர் அதிக கடன் பிரச்சினையால் கஷ்டப்பட்டு வநத்தார் என்பது தெரியவந்தது.வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், அவர் கடனுக்கு பயந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றுமுதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அவரிடம் இருந்து கடிதமும் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications