மியூசியத்திற்கு போகும் வீரப்பன் தந்தங்கள்!
Subscribe to Oneindia Tamil
சேலம்:
வீரப்பனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களைஅருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்புவனத்துறையினர் பறிமுதல் செய்த 10 யானைத் தந்தங்கள், மேட்டூர் வனச்சரகஅலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.அப்போது ஈரோடு வனக் கோட்டத்திற்கு உட்பட்ட சரகமாக மேட்டூர் இருந்தது.இப்போது சேலம் கோட்டத்தின் கீழ் அது உள்ளது.
இப்போது மேட்டூர் வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த தந்தங்களைஎன்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
தந்தங்களை விற்க அரசுத் தடை உள்ளது. எனவே இந்த தந்தங்களை ஏலத்தில் விடமுடியாது. எனவே பேசாமல் இவற்றை அருங்காட்சியகத்திற்கு கொடுத்து விடலாம்என்ற முடிவுக்கு இப்போது வனத்துறை வந்துள்ளது.
விரைவில் இந்த தந்தங்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க மேட்டூர்வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications