கடத்தப்பட்ட தொழிலதிபர் மனைவி தப்பினார்-குற்றவாளியை காட்டி கொடுத்த கல்யாண கேசட்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

போலீஸார் என்று கூறி நகைக் கடை அதிபரின் மனைவியைக் கடத்த முயன்றவாலிபர்களை போலீஸார் அவர்களது கல்யாண கேசட் துணையுடன் கண்டுபிடித்து,ஒருவரைக் கைது செய்தனர்.

கடலூரில் வள்ளிவிலாஸ் என்ற பெயரில் நகைக் கடை வைத்திருப்பவர் சுப்பராயசெட்டியார். இவரது மனைவி சகுந்தலா (65). இவர் தனது காரில் புதுவையில் இருந்துகடலூருக்கு நள்ளிரவில் வந்து கொண்டிருந்தார். காரை ராமலிங்கம் என்பவர் ஓட்டிவந்தார்.

கார், வண்டிபாளையம் என்ற இடத்தில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவாலிபர்கள் காரை மறித்தனர். தங்களை போலீஸார் என்று கூறிக் கொண்ட இருவரும்,காரை சோதனையிட வேண்டும் என்று கூறி காரைத் திறந்து கொண்டு உள்ளேவந்தனர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு வண்டியை கொண்டு போவதாக கூறி காரை ஓட்டத்தொடங்கினர்.

அவர்கள் மீது சந்தேகமடைந்த சகுந்தலாவும், ராமலிங்கம் ஓடும் காரிலிருந்துதுணிச்சலாக வெளியே குதித்துத் தப்பினர். நேராக ரெட்டி சாவடி காவல்நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தனர். போலீஸார் உடனடியாக நடவடிக்கையில்இறங்கினர்.

அந்த நபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி அதைசோதனையிட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு கல்யாண கேசட் இருந்தது.

அதை போலீஸார் போட்டுப் பார்த்தனர். அப்போது அதில் இருந்த ஒரு நபரைசகுந்தலாவும், ராமலிங்கமும் அடையாளம் காட்டினர். இதைத் தொடர்ந்து அந்த நபரைபோலீஸார் வளைத்துப் பிடித்தனர்.

அவரது பெயர் ஹரி என்ற பாலன். நல்லவாடி பகுதியைச் சேர்ந்தவர். அந்தநபரிடமிருந்து காரையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாகி விட்ட இன்னொருநபரையும் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+