மாணவிகளை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது: பெண் எஸ்ஐ மூலம் வலை விரித்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பள்ளி மாணவிகளை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வந்த வாலிபர் பிடிபட்டார். அவரை பெண் சப்-இன்ஸ்பெக்டர்ஒருவர் வலை விரித்துப் பிடித்தார்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எஸ்எஸ்எல்சி படித்து வருகிறார்.அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஆனந்த் (25) ஒரு வங்கியல் கலெக்சன் ஏஜன்டாக பணி புரிந்து வருகிறான்.

இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உமாவை அடிக்கடி வெளியில் அழைத்துச்சென்றுள்ளான் ஆனந்த.

மகாபலிபுரம், பூங்காக்கள், தியேட்டர்களுக்கு அழைத்து சென்றுள்ள இவர் ஒருமுறை திருப்பதிக்கும் அழைத்துச்சென்றிருக்கிறான்.

அப்போதெல்லாம் தன்னிடம் உள்ள வீடியோ செல்போனில் ஆபாசப் படங்களை உமாவுக்கு காட்டி, கிளுகிளுப்புஏற்படுத்தியுள்ளான். ஒரு கட்டத்தில் உமாவையே செல்போன் கேமராவில் பல்வேறு ஆபாச கோணங்களில் படம்எடுத்துள்ளான்.

Ananth
உமாவோடு நிறுத்திக் கொள்ளாமல் அவரது தொடர்பை பயன்படுத்தி அவரது தோழிகளான சக மாணவிகளையும்பழக்கம் பிடித்துள்ளான் ஆனந்த். அவர்களையும் வெளியில் அழைத்துச் செல்வது, மயக்கி, ஆபாச படம் எடுப்பதுஎன்று ஆனந்த் தறிகெட்டுப் போயுள்ளான்.

அந்தப் படங்களைக் காட்டி காட்டியே அந்த மாணவிகளை மேலும் மேலும் மிரட்டி மிக ஆபாசமாக படம்எடுத்துள்ளான்.

வெளியில் தங்களது ஆபாச வீடியோ படங்கள் வெளியானால் மானம் போய்விடும் என்று பயந்து அந்தமாணவிகளும் ஆனந்துக்கு பணிந்து சென்றுள்ளனர்.

இந் நிலையில் மாணவிகளின் வாழ்வை ஆனந்த் நாசமாக்கி வருவது குறித்து சென்னை மகாகவி பாரதி நகர்போலீசாரிடம் மாணவி ஒருவரின் உறவினர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விசாரணையைஆரம்பித்தபோதும் யாரும் எழுத்து மூலம் புகார் தரவில்லை.

இதையடுத்து ஆனந்தை வளைக்க தனிப் படை அமைக்கப்பட்டது. ஆனந்த்திடம் முதலில் சிக்கிய மாணவியானஉமா மூலமாகவே அவனைப் பிடிக்க திட்டமிட்டப்பட்டது.

உமா தனது தோழி என்று கூறி சப்-இன்ஸ்பெக்டர் கயல்விழியை அறிமுகப்படுத்தினார். சுடிதாரில் இருந்தகயல்விழியைப் பார்த்தவுடன் ஆனந்த் தனது வழக்கமான வேலைகளுக்குத் தயாரானான். கயல்விழியுடன்போனில் பேச ஆரம்பித்து, பின்னர் பழகுவது போல நடிக்க ஆரம்பித்தான்.

Sub Inspector Kayalvili
கயல்விழியும் அவன் போக்கிலேயே போனார். ஒரு கட்டத்தில் அவரிடமும் பிற மாணவிகளின் ஆபாசபடங்களை வீடியோவில் காட்டினான் ஆனந்த.

இதையடுத்து போலீஸ் படையை வரவழைத்து அவனை கையும். களவுமாகப் அவரை பிடித்தார் கயல்விழி.

ஆனந்திடம் நடத்திய விசாரணையில் இதுவரை 20 பள்ளி மாணவிகளை ஆபாச படம் எடுத்ததாக ஆனந்தஒப்புகொண்டான். இதற்காக பல செல்போன்களை பயன்படுத்தியுள்ளான்.

அவனிடம் இருந்த ஆபாச வீடியோ பைல்ஸ் பல மணி நேரம் ஓடுகின்றன. அத்தனை படங்களை எடுத்தவைத்துள்ளான். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+