அமைச்சர் கீதா ஜீவனுக்கு நீதிமன்றம் கண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில்ஆஜராகாத அமைச்சர் கீதா ஜீவன் குறித்துதூத்துக்குடி நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 13ம் தேதி அவர்கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் பெரியசாமி. அந்த மாவட்டதிமுக செயலாளராக உள்ள அவர் மீது கடந்த அதிமுக ஆட்சியில் சொத்துக் குவிப்புவழக்கு தொடரப்பட்டது.இதில் பெரியசாமி, அவரது மகளும் தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவன்உள்ளிட்ட 5 பேர் மீது தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்சஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது கீதா ஜீவன் ஆஜராகவில்லை.இதையடுத்து கீதா வராதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி கோபால், அடுத்தமாதம் 13ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட 5 பேரும் கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications