அன்புணியுடன் மோதல்: விடுப்பில் சென்றார் டெல்லி மருத்துவமனை இயக்குநர்
டெல்லி:
மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி மீது பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில்சந்தித்து புகார் கூறிய அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக இயக்குநர் டாக்டர்வேணுகோபால் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக டெல்லியில்டாக்டர்கள் சமீபத்தில் வேலைநிறுத்தம் செய்து வந்தனர். உச்சநீதிமன்றத்தின்எச்சரிக்கையைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கு ஊதியம் கிடையாது என்று சமீபத்தில் டாக்டர்அன்புமணி கூறியிருந்தார். மேலும், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமருத்தவமனை இயக்குநர் வேணுகோபால் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களைத்தெரிவித்திருந்தார்.
வேணுகோபால் தூண்டுதலின்பேரில்தான் வேலைநிறுத்தம் நடந்தது.வேணுகோபாலின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன.அவரை மாற்றக் கோரி பலரும் வலியுறுத்துகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்அன்புமணி.
அன்புமணிக்கும், வேணுகோபாலுக்கும் இடையிலான மோதல் வலுத்து வந்தநிலையில், வேணுகோபால் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து சுமார் 1மணி நேரம் பேசினார்.
அப்போது அன்புமணி மீது சரமாரியாக பல்வேறு புகார்களைத் தெரிவித்தார். மேலும்,கடந்த 2 ஆண்டுகளில் அன்புமணியின் போக்கு காரணமாக பல பிரபலமானடாக்டர்கள் மருத்துவமனையை விட்டு விலகிப் போயிருக்கிறார்கள்.
என் மீதும் அன்புமணி பல்வேறு புகார்களைக் கூறி வருகிறார். இந்த மன உளைச்சல்காரணமாக தான் நீண்ட விடுப்பில் செல்வதாக பிரதமரிடம் கூறியுள்ளார்வேணுகோபால்.
இதற்கிடையே, வேணுகோபால் மீது அதிருப்தி அடைந்துள்ள மருத்துவமனைஇயக்குநர் மற்றும் பல்வேறு டாக்டர்கள் அவரை மாற்றக் கோரி அன்புமணிக்குகோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications