போலீஸ் தாக்கி 2 இலங்கை அகதிகள் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல் அகதிகள் முகாமைச் சேர்ந்த 2 அகதிகளை போலீஸார் கடுமையாகதாக்கியதால் இருவரும் காயமடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகள் தங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 6முகாம்கள் உள்ளன.

இதில் தோட்டனூத்து என்ற இடத்தில் உள்ள முகாமில் 135 குடும்பங்களைச் சேர்ந்தஇலங்கைத் தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறுதனியார் நிறுவனங்களில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த முகாமுக்கு கியூ பிரிவு போலீஸார் சில நாட்களுக்கு முன்பு வந்தனர். அங்கிருந்தமனோகரன், செல்வராஜ், குகன், தேவா, மகேந்திரன் ஆகிய ஐந்து அகதிகளைஅழைத்துச் சென்ற போலீஸார் பின்னர் அவர்களை விடுவித்தனர்.

ஐந்து பேரும் பலத்த காயங்களுடன் வந்ததைப் பார்த்த அவர்களது குடும்பத்தினரும்,மற்ற அகதிகளும் அதிர்ச்சி அடைந்து என்ன நடந்தது என்று அவர்களிடம் கேட்டனர்.அதற்குத் தங்களை போலீஸார் அடித்து, உதைத்தனர் என்று காயமடைந்த அகதிகள்கூறியுள்ளனர்.

இதையடுத்து படுகாயம் அடைந்த செல்வராஜ், மனோகரன் ஆகியோரது நிலைகவலைக்கிடமாக இருந்ததால் அவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்சேர்த்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.

போலீஸார் தாக்கியதால் ஐந்து அகதிகள் காயமடைந்துள்ளது முகாமில் உள்ளஅகதிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+