ஜெ விறுவிறு-விரைவில் மா.செயலாளர்கள் மாற்றம்
சென்னை:
சட்டசபையில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை மாநிலஅளவிலும் மீண்டும் பலம் வாய்ந்ததாக மாற்ற கட்சியின் மாவட்டச் செயலாளர்களைமாற்ற கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலலிதா திட்டமிட்டுள்ளார்.
இதற்காக வருகிற 22ம் தேதி சென்னையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில்முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைநடத்தவுள்ளார்.திமுகவிடம் ஆட்சியை இழந்தாலும் சட்டசபையில் மிகப் பெரிய எதிர்க்கட்சியாகஅமர்ந்திருக்கிறது அதிமுக. எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை தானே ஏற்றுள்ளார்ஜெயலலிதா. ஆட்சியை இழந்தபோதிலும் தொண்டர்கள் மத்தியில் பெரிய அளவில்ஏமாற்றம் இல்லை என்ற போதிலும், கட்சியை மேலும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்ஜெயலலிதா
முதல் கட்டமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும்அதிமுக தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்தபோராட்டத்துக்கு ஜெயலலிதாவே தலைமை தாங்கி கோஷம் போட்டுக் கலக்கினார்.
இந்தப் போராட்டத்தில் பெரும் திரளாக அதிமுக மற்றும் மதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டது ஜெயலலிதாவை உற்சாகப்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள்கட்சியினரும் அதிமுகவினருடன் ஒத்துழைப்பாக செயல்படுவது அவரைசந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த கட்டமாக கட்சியின் பல மாவட்ட செயலாளர்களை மாற்ற ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார். இதற்காக 22ம் தேதி அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்குவருகிறார் ஜெயலலிதா. அன்று முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மாவட்டநிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் மாவட்டச்செயலாளர்கள் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.
மேலும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பேர் அன்றைய தினம்ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications