வழக்கறிஞரை போட்டுத் தள்ளிய சாராய கும்பல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரம் அருகே சாராய கும்பலை காட்டிக் கொடுத்த வழக்கறிஞர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (32) என்ற அந்த வழக்கறிஞர் விழுப்புரம் மாவட்ட பாமக சட்டபாதுகாப்புக் குழு தலைவராகவும் இருந்தார்.நேற்று மாலை இவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிரே சில பைக்குகளில் வந்த கும்பல் ஆறுமுகத்தின்பைக் மீது மோதினார். இதில் ஆறுமுகம் நிலை தடுமாறி கிழே விழுந்தார். இதையடுத்து அவரை அந்தக் கும்பல்சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் ஆறுமுகத்தின் தலை மற்றும் கைகளில் வெட்டு விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆறுமுகத்தை அந்த ஊர் பொது மக்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இதுபற்றி போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கள்ளச் சாராய கும்பலை போலீசில் காட்டிகொடுத்ததால் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications