கேஸ் பயன்படுத்தும் வாகனமா? எச்சரிக்கை...

Subscribe to Oneindia Tamil

சேலம்:

கேஸ் சிலிண்டரால் இயங்கும் மாருதி வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் வேனில் பயணம் செய்தஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

சேலம் கிச்சிப்பாளையமம் ஒந்தாப்பிள்ளை காடடைச் சேர்ந்த முபாரக் (32). இவர் பிரியாணி மாஸ்டராகபணியாற்றி வருந்தார். இவர் தனது மாருதி வேனை மரவனேரியில் பழுது பார்க்க விட்டருந்தார்.

Mubarak Body

பழுது நீக்கப்பட்ட பின் கேரேஜ் அதிபர் சையத் தஜ்மல் (32) மாருதி வேனை சோதனை செய்து ஓட்டிப் பார்த்தார்.பின் பகுதியில் முபாரக், அவருடன் பணியாற்றும் சமையல் தொழிலாளிகள் நாசர் (35) மற்றும் அப்பாஸ் (18)ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

வேன் மெயின் ரோடு வந்தபோது திடீரென தீப்பிடித்துக் கொண்டது. வேனில் இருந்தவர்கள் தப்ப முயன்றனர்.ஆனால் கதவுகளைத் திறக்க முடியவில்லை.

இதையடுத்து கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்தனர். தஜ்மல், நாசர், அப்பாஸ் ஆகியோர் தப்பிவிடமுபாரக் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டார். இதற்குள் வேன் முழுவதுமாக எரிய ஆரம்பித்துவிட்டது.இதனால் அவரை காப்பாற்றவும் முடியவில்லை.

இதில் அவர் வேனிலேயே உடல் கருகி உயிரிழந்தார். காயம் அடைந்த நாசர், அப்பாஸ் ஆகியோர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேனில் பொருத்தப்பட்டு இருந்த கேஸ் சிலிண்டர்தான் விபத்தக்குகாரணம் என தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+