திருக்குறள் கருத்தரங்குகள்: பரிதி உத்தரவு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் அடிக்கடி திருக்குறள்தொடர்பான கருத்தரங்குகள், கலைப் படங்களின் திரை விழா, குழந்தைகள்திரைவிழாக்கள் ஆகியவற்றை நடத்த ஏற்பாடு செய்யும்படி தமிழக செய்திஒலிபரப்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
செய்தி ஒலிபரப்புத் துறையின் கீழ் வரும் கலைவாணர் அரங்கம், வள்ளுவர்கோட்டம், காமராஜர் நினைவிடம் ஆகியவற்றை பரிதி இளம்வழுதி இன்று சுற்றிப்பார்த்தார்.
கலைவாணர் அரங்கை அவர் சுற்றிப் பார்த்தபோது திரைச் சீலை இயங்காமல்இருப்பதை அறிந்தார். உடனடியாக அதை சரி செய்ய உத்தரவிட்டார். பின்னர் கிழிந்துபோயிருந்த இருக்கைகளை சரி செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
குழந்தைகள் திரைப்பட விழா, கலைப்படங்களின் திரைப்பட விழாக்களை இங்குஅடிக்கடி ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். முன்புஇங்கு காலை நேரத்தில் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தது. பின்னர்
நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் வள்ளுவர் கோட்டத்திற்கு பரிதி சென்றார். அங்கு கழிப்பறை வசதிகளைமேம்படுத்துமாறு கூறிய பரிதி, மேற்கூரையை ஸ்திரப்படுத்தி மழைக்காலங்களில்மழை நீர் ஒழுகாமல் தடுக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து, அடிக்கடி திருக்குறள் தொடர்பானகருத்தரங்குகளை நிடத்தவும் அவர் அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின்போது வைக்கப்பட்டஓவியங்களை புதுப்பித்து வள்ளுவர் கோட்டத்தில் வைக்கவும் உத்தரவிட்டார்.