விவசாயிகள் கடன் தள்ளுபடி: தள்ளாடும் வங்கிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 6,866 கோடி கடனை தள்ளுபடி செய்த தமிழக அரசு அந்தப்பணத்தை உடனடியாக கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் வாங்கிய கடன் தொகைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் கூட்டுறவுவங்கிகளுக்கு ஏற்படும் ரூ. 6,866 கோடியை தமிழக அரசு வழங்கும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந் நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம்பேசுகையில்,

வட்டிக்கு கடன் தந்து, அதை வசூல் செய்தால் தான் கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்பட முடியும். கடன்தள்ளுபடி செய்தது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது உண்மை தான்.

ஆனால், அதை இழந்துள்ள வங்கிகளுக்கு உடனடியாக தமிழக அரசு நிதியைத் தர வேண்டும். இதன்மூலம் தான்அடுத்த பருவத்துக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்க முடியும். இதில் தாமதம் கூடாது.

பணம் வழங்கப்படாவிட்டால் கூட்டுறவு வங்கிகள் பெரும் பிரச்சனைகளை சந்திக்கும். கடந்த 3 வருடமாக கடன்வசூலுக்கு தடை விதிக்கப்பட்டதால் மொத்தமுள்ள 4,445 விவசாய கூட்டுறவு வங்கிகளில் 1,150 வங்கிகள்மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

விவசாயிகள் வாங்கிய கடனை அரசு ஈடு செய்யாவிட்டால் அவற்றை மூடுவதைத் தவிர வேறு வழியில்லைஎன்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+