14 எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகததில் 14 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தங்களை எதிர்த்து வெற்றிபெற்றவர்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர கால அவகாசம் அளிக்கப்படும்.அந்த காலக் கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து நேற்றுடன் மொத்தம் 14 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களைஎதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கடைசி நாளான நேற்று மட்டும் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்துவழக்கு தொடரப்பட்டுள்ளது. மொத்தம் 14 தொகுதிகளின் எம்.எல்.ஏக்களின்வெற்றியை எதிர்த்து வழக்கு போடப்பட்டுள்ளது.

நேற்று மருங்காபுரி, ராஜபாளையம், பண்ருட்டி, பொங்கலூர் ஆகிய தொகுதிஎம்.எல்.ஏக்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு போடப்பட்டது.

ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. சந்திரா, தான் தலித்வகுப்பைச் சேர்ந்தவர் என்று பொய்யான சான்றிதழைக் காட்டி வெற்றி பெற்றுள்ளதாககூறி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தங்கமுத்து வழக்குதொடர்ந்துள்ளார்.

பண்ருட்டி தொகுதியில் பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் வன்முறையின் மூலம்வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் வழக்குபோட்டுளளார்.

பொங்கலூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. எஸ்.மணி, விதிமுறைகளை மீறி வெற்றிபெற்றதாகக் கூறி அதிமுக வேட்பாளர் தாமோதரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மருங்காபுரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னச்சாமி, மீது ஊழல் புகார் உள்ளநிலையில் அதை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்ததாக தோல்வி அடைந்த திமுகவேட்பாளரா ரொகையா மாலிக் (கவிஞர் சல்மா) வழக்கு தொடர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+