தூக்கில் தொங்கிய கள்ளக் காதல் ஜோடி!
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கள்ளக்காதல் வெளியே தெரிந்துபோனதால் அவமானமடைந்த ஒரு ஜோடி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டது.
திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்தெய்வானை (29). இவரது கணவர் முனியப்பன். இவர்களுக்கு 3 குழந்தைகள்உள்ளனர். இதே பகுதியைச் சேர்ந்தவர் சவுக்கு என்ற சவுந்திரம். இவரது மனைவிமேகலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.சவுந்திரமும், தெய்வானையும் அப்பகுதியில் உள்ள தறி நிலையத்தில் வேலை பார்த்துவந்தனர். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. இருவரும்அடிக்கடி தனிமையில் சந்தித்து சந்தோஷம் அடைந்தனர்.
இந்தக் கள்ளக் காதல் சவுந்தரம் வீட்டுக்குத் தெரிய வந்தது. இதனால் சவுந்தரம்வேலையை விட்டு நின்று விட்டார்.
அதன் பின்னர் 19ம் தேதி முதல் சவுந்தரம் மற்றும் தெய்வானையைக் காணவில்லை.இரு வீட்டாரும் இவர்களைத் தேடி வந்தனர். இந் நிலையில் திருச்செங்கோடுமலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள மரத்தில் சவுந்தரமும்,தெய்வானையும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதுகண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளக் காதல் வெளியில் தெரிந்து விட்டதால் அவமானமடைந்து இருவரும்தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த மலைப் பகுதியில் அடிக்கடி தற்கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.












Click it and Unblock the Notifications