சிறையில் மதானியுடன் தங்க மனைவிக்கு அனுமதி?
திருவனந்தபுரம்:
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்துல் நாசர் மதானிக்கு சிகிச்சைஅளிக்கும்போது அவரை கூட இருந்து கவனித்துக் கொள்ள அவரது மனைவியைஅனுமதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக கேரள முதல்வர்அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டசபையில், இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அச்சுதானந்தன்பதிலளிக்கையில்,கோவை மத்திய சிறையில் மதானிக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிகிச்சைக்கு நல்ல முறையில் மதானி ஒத்துழைப்பு கொடுக்கிறார்.
மதானிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் அவருடன் இருந்து கவனித்துக் கொள்ளதன்னை சிறைக்குள் தங்க அனுமதிக்க வேண்டும் என்று மதானியின் மனைவிசோஃபியா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கை குறித்து பரசீலிப்பதாகவும், சிறை விதிமுறைகள் அதற்கு இடம்கொடுக்குமா என்பதை ஆராய்ந்து பார்ப்பதாகவும் தமிழக அரசு உறுதியளித்துள்ளதுஎன்றார் அச்சுதானந்தன்.
சமீபத்தில் சென்னைக்கு வந்த அச்சுதானந்தன், மதானிக்கு சிகிச்சை தர ஏற்பாடு செய்யவேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்துமதானியை பரிசோதிக்க சென்னையிலிருந்து மருத்துவக் குழு கோவை சிறைக்குஅனுப்பப்பட்டது.
இந்தக் குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications