For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலினை குத்த முயன்றது வட மாநில ஆசாமி?

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

அமைச்சர் ஸ்டாலினை மதுரை ரயில் நிலையத்தில் கத்தியால் குத்த முயன்ற நபர் வடமாநில ஆசாமியாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

கடந்த 13ம் தேதி மதுரை சென்ற ஸ்டாலினை ஒரு மர்ம நபர் கத்தியால் குத்தயன்றதாக பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபர் பலத்த போலீஸ் காவல் மற்றும் தொண்டர்கூட்டத்தையும் தாண்டி மாயமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந் நிலையில் அந்த நபர் யார் என்பது தெரியாமல் மதுரை போலீஸார் குழம்பிப்போய் உள்ளனர். இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.இதில் 150 பேர் திமுகவினர்.

மர்ம நபரின் முகம் கம்ப்யூட்டர் உதவியால் வரையப்பட்டு வெளியிட்டும் கூட துப்புஏதும் கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

அந்த மர்ம நபரிடமிருந்து கத்தியைப் பிடுங்கிய மத்திய தொழிலக பாதுகாப்புப் படைகாவல்காரர் சுரேஷ்குமார் பாண்டே கூறிய தகவல்களை வைத்துப் பார்க்கையில், அவர்வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

அந்த கோணத்தில் தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X