ஓடும் ரயிலிலிருந்து குதித்துத் தப்பிய கைதி!
சென்னை:
போபாலில் இருந்து வழக்கு விசாரணைக்காக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டகைதி ஓடும் ரயிலில் இருந்து குதித்துத் தப்பினார்.
சென்னை கீழ்ப்பாக்கம் மேடவாக்கம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர்கடந்த 2002ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மத்திய குற்றப் பிரிவுபோலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இதுதொடர்பாக போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது வினோத் தப்பி விட்டார். அவரைசென்னை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந் நிலையில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் போதைப் பொருள்கடத்தியபோது மாட்டிக் கொண்டார் வினோத். இதுதொடர்பாக அங்குள்ளநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போபால் சிறையிலஅடைக்கப்பட்டிருந்தார் வினோத்.
சென்னையில் அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் விசாரணைக்காகஅவ்வப்போது வினோத்தை ம.பி. போலீஸார் சென்னைக்கு ரயிலில் அழைத்துவருவார்கள்.
இதேபோல, கடந்த 23ம் தேதி சென்னை நீதிமன்றத்தில் வினோத் சம்பந்தப்பட்டவழக்கு விசாரணைக்கு வந்தது.
இதற்காக அவரை போலீஸ்காரர் நிரஞ்சன்குமார் உள்ளிட்ட 3 பேர் போபாலிலிருந்துஅழைத்து வந்தனர். அவர்கள் வந்த ரயில் 23ம் தேதி காலை கொருக்குப்பேட்டைஅருகே வந்தபோது, திடீரென வினோத போலீஸாரிடமிருந்து தப்பி கீழே குதித்து தப்பிஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதிர்ந்து போன போலீஸார் உடனடியாக சென்டிரல் ரயில் நிலைய ரயில்வேபோலீஸாரிடம் புகார் கொடுத்தனர். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ம.பி. போலீஸார் வேண்டும் என்றே வினோத்தை தப்ப விட்டிருக்கலாம் என்றசந்தேகம் எழுந்துள்ளதால் அவர் எப்படித் தப்பித்தார் என்பது குறித்து ரயில்வேபோலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.