செக்ஸ் புகார்கள்: ஜீனாகுமாரி வழியில் சித்திலலிதாகுமாரி-போட்டு உடைக்கும் ஜோன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

Lalitha Kumari
மதுரை அரசு மருத்துவனை டாக்டரும், அவரது நண்பரும் தன்னை டீன்குவார்ட்டர்ஸுக்குக் கொண்டு போய் விடிய விடிய கற்பழித்ததாக பரபரப்பு புகார்கூறியுள்ள சிவகாசி ஜெயலட்சுமியின் தோழி லலிதாகுமாரி, சென்னை அரசுமருத்துவமனை டாக்டர் மீது பாலியல் புகார் கூறியுள்ள ஜீனாகுமாரியின் சித்தி என்றுதெரிய வந்துள்ளது.

இருவர் குறித்தும் பல்வேறு பரபரப்பான தகவல்களை ஜீனாகுமாரி மீது ஆசிட்ஊற்றியதாக 2 முறை கைது செய்யப்பட்ட ஜோன்ஸ் என்பவர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு உலுக்கியது ஜீனாகுமாரி கொடுத்தபரபரப்பு புகார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.பார்ம் இறுதியாண்டு படிக்கும் ஜீனா குமாரி,தன்னை அரசு மருத்துவமனை டாக்டர் பிரின்ஸ் பிரபாகர், ஒன்றரை வருடங்களாகபாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும்,

2 முறை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், தனி அறையில் கட்டிப் பிடித்து முத்தம்கொடுத்ததாகவும் மாநகர காவல்துறை ஆணையர் லதிகா சரணிடம் புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரின் பேல் டாக்டர் பிரின்ஸ் பிரபாகர் கைது செய்யப்பட்டு தற்போதுஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.

Dr.Prince Prabhakaran
ஜீனாகுமாரிக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. ஏற்கனவே இருமுறை அவர்மீது ஆசிட் ஊற்றப்பட்டது. அந்த சம்பவம் தொடர்பாக ஜோன்ஸ் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

ஜோன்சும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். தன்னை ஜீனா காதலிக்கமறுத்ததால் அவர் ஆசிட் வீசியாதக் கூறப்பட்டது.

இந் நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்த ஜீனா குமாரிதிடீரென ஒரு வாரம் காணாமல் போய் விட்டார்.

இந்த சம்வபத்திலும் ஜோன்ஸின் பெயரே அடிபட்டது. ஆனால் ஜோன்ஸ்தான்தன்னைக் கடத்தியதாக ஜீனா குமாரி சொன்ன புகாரில் உண்மை இல்லை என்று தெரியவந்ததால் ஜோன்ஸ் விடுவிக்கப்பட்டார்.

இந் நிலையில் தற்போது ஜோன்ஸ் பரபரப்பாக பேட்டி தந்துள்ளர். அவர் கூறுகையில்,

Jeena Kumari
ஜீனா குமாரியால் நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. செய்யாத தவறுக்காகநான் தண்டனை அனுபவித்தேன். நான்கு வருடங்களுக்கு முன்புதான் எனக்கும், ஜீனாகுமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அப்போ துஎனது ஊரான கல்லுவிளைக்கு அருகில் உள்ள கூட்டமாவு என்றகிராமத்தில்தான் ஜீனா குமாரி அவரது தாயாருடன் தங்கியிருந்தார்.

என்னிடம் 5000 ரூபாய் கடன் கேட்டார். நான் கொடுத்தேன். கொடுத்த பணத்தைத்திருப்பிக் கேட்டபோது பிரச்சினை உருவானது. 2003வது ஆண்டு ஜனவரி 14ம் தேதிநான் அவர் மீது ஆசிட் ஊற்றியதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் நான் கைதுசெய்யப்பட்டேன்.

பின்னர் அவர் படித்து வந்த வடக்கன்குளம் பார்மசி கல்லூரிக்குச் சென்று ஆசிட்வீசியதாக புகார் கொடுத்தார். அதிலும் நான் கைது செய்யப்பட்டேன். இப்போதும்டாக்டர் பிரின்ஸ் பிரபாகர் மீது புகார் கொடுத்துள்ளார்.

அவர் என் மீது கொடுத்த புகார்களில் உண்மையே இல்லை. பெண் என்பதால்ஜீனாகுமாரி சொன்தை போலீஸ் நம்பி செயல்பட்டது. நான் அவரைசென்னையிலிருந்து பெங்களூருக்கு கடத்திச் செல்ல முயன்றதாக பின்னர்நாடகமாடினார். அதில் பொய் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இருந்தாலும் ஜீனா குமாரி பெண் ஆனதால், என் மீது போலீஸார் பொய் வழக்குப்போட்டனர். குண்டர் சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்தனர்.

தற்போது நான் ஜாமீனில் விடுதலையாகி எனது ஊரில் இருக்கிறேன். இப்போதுசெய்தித்தாள்களைப் பார்த்தால் டாக்டர் மீது ஜீனா குமாரி கொடுத்துள்ள புகார்தான்பரபரப்பாக இருக்கிறது. ஜீனா குமாரி ஒரு ஃபிராடு என்பது விசாரணையின் முடிவில்தெரிய வரும். பாவம் அந்த டாக்டர் பிரின்ஸ். இப்போது அவர் ஜீனாவிடம்மாட்டியுள்ளார்.

ஜீனா குமாரியிடம் ஆண்கள் சிக்கி மோசம் போகும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

இப்போது மதுரை அரசு மருத்துவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள லலிதா குமாரிவேறு யாரும் அல்ல, ஜீனாகுமாரியின் சொந்த சித்திதான் அவர். இவர் ஏற்கனவேதக்கலை போலீஸார் மீதும் செக்ஸ் புகார் கூறினார். மொத்தத்தில் அவர்களதுகுடும்பமே ஒரு ஃபிராடு குடும்பம் என்கிறார் ஜோன்ஸ்.

ஜோன்ஸ் கூறுவதைப் பார்த்தால் தலையைச் சுற்றிக் கொண்டு வருகிறது.

இதற்கிடையே, கற்பழிப்புப் புகார் கூறியுள்ள லலிதாகுமாரிக்கு மருத்துவப்பரிசோதனை செய்ய மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைநடத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+