அக்ஷர்தாம் கோவில் தாக்குதல்: 3 பேருக்கு மரண் தண்டனை!
அகமதாபாத்:
புகழ்பெற்ற அக்ஷர்தாம் கோவில் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பானவழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து குஜராத் மாநில பொடா நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற 2 பேருக்குகடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ளது அக்ஷர்தாம் கோவில்.
இந்தக் கோவிலில் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி புகுந்த பாகிஸ்தான்ஆதரவு தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிளால் சுட்டனர். குண்டு வீசியும் அவர்கள்தாக்கினர்.
இதில் அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட 35 பேர் பலியாயினர். 81 பேர்காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது அகமதாபாத்தில் உள்ள பொடா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி உத்தரப்பிரதேசமாநிலத்தைச் சேர்ந்த சந்த் கான் சஜ்ஜத் கான், ப்தி அப்துல் கயூம் மன்சூரி, ஆதம்சுலைமான் அஜ்மீரி ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்கள் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்ததாகவும், சதி வேலையில்ஈடுபட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
முகம்மது சலீம் ஷேக் என்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ப்தி அப்துல்மியான் காத்ரி என்பவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதிதீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications