எஸ்.எஸ்.சந்திரனைப் பிடிக்க தனிப்படை
மதுரை:
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் நடிகர் எஸ்.எஸ்.சந்திரனைப்பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவர் எஸ்.எஸ்.சந்திரனின் தம்பிமகன் தனசேகரனின் மனைவி ஆவார். கடந்த 2002ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம்நடந்தது.கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில்மதுரை தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் லதா ஒரு புகார் கொடுத்தார். அதில்தனசேகரன், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்துவதாகவும், கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் சென்னைக்கு வந்த மதுரை போலீஸார் எஸ்.எஸ்.சந்திரனின்வீட்டை அதிரடியாக சோதனை இட்டனர். பின்னர் தனசேகரனை கைது செய்துமதுரைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வைத்து விசாரணை நடத்திய பின்னர் இன்று காலை அவரை மதுரைகுற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தனசேகரனை 15 நாள் சிறைக் காவலில்வைக்க நீதிபதி ராமபார்த்திபன் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இவ்வழக்கில் தனசேகரன் தவிர எஸ்.எஸ்.சந்திரன், மகள் கண்மணி,தனசேகரனின் தந்தை தனபாலன் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் சேர்த்துள்ளனர்.
இவர்களில் எஸ்.எஸ்.சந்திரன் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்கதனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.