மதானிக்கு சிறையிலேயே ஆயுர்வேத சிகிச்சை
கோவை:
குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள அப்துல் நாசர் மதானிக்கு கோவை மத்தியசிறைக்குள்ளேயே ஆயுர்வேத சிகிச்சை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி, கோவை தொடர் குண்டுவெடிப்புவழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால்,மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மதானியின்மனைவி நீண்ட காலமாக கோரி வருகிறார்.
சமீபத்தில் சென்னைக்கு வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தனும் இதுகுறித்து தமிழகமுதல்வர் கருணாநிதியிடம் பேசினார். இதைத் தொடர்ந்து மதானியின் உடல் நிலைகுறித்து மருத்துவர் குழு பரிசோதனைகள் செய்தது.
மதானிக்கு எங்கு வைத்து சிகிச்சை அளிக்கலாம் என்பது குறித்து அரசு ஆலோசித்துவந்தது. தற்போது மத்திய சிறைக்குள்ளேயே வைத்து சிகிசிச்சை தர முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையம், மதானிக்குஆயுர்வேத சிகிச்சை அளிக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவருக்கு இனிமேல் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது. விரைவில்கோவை சிறையில் மதானிக்கு ஆயுர்வேத சிகிச்சை தொடங்கும்.
மதானி விரும்பியபடியே அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications