சேலம் உருக்காலை: பிரதமருக்கு கருணாநிதி நன்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேலம் இரும்பாலையை, எஃகு உருக்காலையாக தரம் உயர்த்தியதற்காக பிரதமர்மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் இரும்பாலை உருவாகிடவும், வளர்ந்து செழித்திடவும் பல்வேறு காலகட்டங்களில் திமுக குரல் கொடுத்து வந்திருக்கிறது. பெரும்பாடுபட்டிருக்கிறது.

உருட்டாலையாக செயல்பட்டு வரும் சேலம் இரும்பாலை உருக்காலையாகமாற்றப்பட வேண்டும் என்று மத்தியஅரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்திருக்கிறோம், போராடியிருக்கிறோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் சேலம் இரும்பாலையை பாஜகவினர் தனியார்மயமாக்கிட முயற்சி செய்தபோது, அதனை கடுமையாக தடுத்து நிறுத்தியது திமுக.

நமது நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையில் தற்போதைய மத்திய ஆட்சியில்,சேலம் இரும்பாலையை உருக்காலையாக மாற்றி, அதன் தரத்தை சர்வதேச அளவுக்குஉயர்த்திட 1,553 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டுவதோடு, இதற்குக் காரணமான பிரதமர்மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+