முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகத்திற்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்வந்ததாக புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சிவி.சண்முகத்தின் வீடு திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ளது. திண்டிவனம்தொகுதி எம்.எல்.ஏ.வும் ஆன சிவி.சண்முகம் வியாழக்கிழமை தனது வீட்டில்கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரது செல்போனில் அழைப்பு வந்தது.அதை சண்முகத்தின் உதவியாளர் ராஜாராம் எடுத்துப் பேசினார். மறுமுனையில்பேசிய நபர் சண்முகத்தையும், அவரது
குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என்று கூறி விட்டு வைத்துள்ளார்.
இதேபோல அடுத்தடுத்து 3 முறை கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து ராஜாராம்போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியிலிருந்து இந்த கொலைமிரட்டல் வந்ததைக் தெரிய வந்தது. இதையடுத்து போனில் பேசிய நபரைப் பிடிக்கபோலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications