நடிகைகளை நம்பாதீர்: நம்பியார்
சென்னை:
சபரிமலை விவகாரம் தொடர்பாக நடிகைகள் ஜெயமாலா, சுதா சந்திரன் ஆகியோர்கூறுவதை யாரும் நம்பக் கூடாது. இருவருமே பொய் சொல்கிறார்கள் என்றுபழம்பெரும் வில்லன் நடிகரும், ஐயப்ப பக்தர்களின் குருசாமியாக பல ஆண்டுகாலமாக இருந்துவரும் எம்.என். நிம்பியார் கூறியுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த நம்பியார் தீவிர ஐயப்ப பக்தர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும்மேலாக சபரிமலைக்கு விரதம் இருந்து சென்று வருபவர். பல ஆண்டுகளாககுருசாமியாக இருந்து வரும் அவரது தலைமையில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தஏராளமான நடிகர்கள் மாலை போட்டு சபரிமலைக்குச் சென்று வந்துள்ளனர்.தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து நம்பியார் வேதனை வெளியிட்டுள்ளார். 62வருடமாக நான் சபரிமலைக்குச் சென்று வருகிறேன். அங்கு பெண்கள் வரவேமுடியாது. பம்பை நதிக்கு மேல் அவர்களால் நிச்சயம் செல்லவே முடியாது.
மேலும் 18ம் படிக்கு மேல் ஆண்களே கூட கருவறைக்கு பக்கத்தில் கூட செல்லமுடியாது. அங்கிருந்து 5 அடி தூரத்தில் சன்னிதானம் உள்ளது.
![]() |
யாராவது தந்திரிதான் அவரைக் கூட்டிக் கொண்டு விட்டிருக்க வேண்டும் என்றுசொல்வதாக இருந்தாலும் கூட அதற்கும் வாய்ப்பில்லை.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ள நிலையில், அப்படி எந்தத் தந்திரியும் நடந்துகொள்ள முன் வந்திருக்க முடியாது. அப்படி நடந்து கொண்டால் அந்த தந்திரியின்வேலை போயிருக்கும்.
பக்தர்களும் இதை அனுமதித்திருக்க மாட்டார்கள்.
![]() |
18வது படி மீது சுதா சந்திரன் ஏறவே இல்லை. அவர் அங்கு நின்று நடனம் ஆடவும்இல்லை. அது தவறான செய்தி. படிகளின் மீது அவர் ஏறி வந்தார். அது மட்டும்தான்உண்மை.
ஆனால் கடைசிப் படி வரை ஏற அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்தசமயத்தில் எனது மனைவியும் என்னுடன்தான் இருந்தார். அவரையும் கேட்டுப் பார்த்துதெரிந்து கொள்ளலாம்.
எனவே இரண்டு நடிகைகளும் பொய் சொல்கிறார்கள். இதை யாரும், குறிப்பாகஐயப்ப பக்தர்கள் நம்பக் கூடாது என்று கூறியுள்ளார் நம்பியார்.














Click it and Unblock the Notifications