போலீசிடமிருந்து தப்பி பஸ்சில் அடிபட்ட வாலிபர்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
போலீஸாரின் அடி, உதையில் இருந்து தப்பி காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடியவாலிபர், பேருந்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
நெல்லையைச் சேர்ந்தவர் மரியராஜு. இவரும், இவரது தாயாரும் வெளியூர் போய்விட்டு நெல்லைக்குத் திரும்பினர். பஸ் நிலையத்தில் இருவருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது தாயாரை மரியராஜு அடித்ததாக கூறப்படுகிறது.இதைப் பார்த்த அங்கிருந்த போலீஸார் மரியராஜுவை அங்கிருந்து அருகில் உள்ளகாவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். அங்கு மரியராஜுவை போலீசார்சரமாரியாக அடித்து உதைத்ததாக தெரிகிறது.
போலீஸாரின் அடி, உதையால் தாங்காமல் மரியராஜு அங்கிருந்து தப்பி வெளியேஓடிவந்தார். போலீஸாரும் அவரை துரத்தினர். இதில் தாறுமாறாக ஓடிய மரியராஜு,எதிரே வந்த பேருந்தில் மோதி கீழே விழுந்தார்.
பேருந்தின் சக்கரத்தில் அவர் சிக்கிக் கொண்டதால், படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications