தமிழகம்-காது கேளாாத குழந்தைகள் 1 லட்சம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 1.07 லட்சம் காது கேளாத குழந்தைகள் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதைதெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஹூமா மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பூங்கோதைபேசுகையில்,தமிழகத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 1,07,000 பேர் காது கேளாமல் உள்ளனர். இதை தடுக்கருபெல்லா தொற்றுக் கிருமி ஒழிப்புத் திட்டத்தையும் மருத்துவர்கள் செயல்படுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோரின் பராமரிப்பே உதவிகரமாக இருக்கும் என்பதை ஆய்வுகள்நிரூபித்துள்ளன என்றார்.
மேலும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் கவுன்சலிங், ஆலோசனைபோன்றவற்றை மருத்துவர்கள் வழங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications