அக்னி -3 ஏவுகனை சோதனை வெற்றி!
புவனேஸ்வர்:
இந்தியாவின் நீண்ட தொலைவு ஏவுகனையான அக்னி-3 ஏவுகனை இன்றுவெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிநவீன அக்னி-3 ஏவுகனை இன்று ஒரிசா மாநிலம், பத்ராக் அருகே உள்ள வீலர் தீவில்வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள்அக்னி-3 ஏவுகனை வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைப் பார்த்தனர்.
அக்னி-3 ஏவுகனையின் தாக்குதல் தொலைவு 3500 கிலோமீட்டர் ஆகும். இதில் அணுஆயுதங்களை பொருத்த முடியும். சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் ஆகியநகரங்களைத் தாக்க முடியும்.
இந்தியாவின் அதி நவீன, அதி தொலைவு ஏவுகனை வரிசைகளில் அக்னி-3 முதல்இடத்தைப் பிடித்தாலும் கூட சீனாவின் ஏவுகனைகளுக்கு முன்பு நாம் மிகவும் சிறியஇடத்தில்தான் இன்னும் இருக்கிறோம்.
அக்னி3 ஏவுகனை சோதனை 2 முறை திட்டமிடப்பட்டு இரண்டு முறையும்ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவுக்கும், அமெரிக்காவும் இடையில் ஏற்பட்டுள்ளஅணு ஒப்பந்தம் பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்பதுதான் இதற்கு முக்கியக்காரணம்.
தற்போது அணு சக்தி ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதைத் தொடர்ந்து அக்னி-3ஏவப்படடு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தொடர்பான செய்திகள்பு தயாரித்துள்ள அக்னி1, அக்னி2 ஆகியவை முழுமையானஅளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ராணுவத்தில் படிப்படியாக சேர்க்கப்பட்டுவருகின்றன.
அக்னி-3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர்மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விஞ்ஞானிகளுக்குவாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications