இலக்கை தாக்கத் தவறியது அக்னி-3 ஏவுகனை!
தம்ரா:
இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நவீன அக்னி-3 ஏவுகனைஇலக்கைத் தாக்கத் தவறியதால் இந்த சோதனை தோல்வி அடைந்துள்ளதாகவிஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவின் அதி நவீன நீண்ட தொலைவு ஏவுகனையான அக்னி வரிசையில் 3வதுஏவுகனையை இந்தியா முழுக்க முழுக்க சொந்தத் தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ளது.அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையில் அக்னி-3 வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலம் வீலர் தீவு பகுதியிலிருந்து அக்னி-3 ஏவப்பட்டது. வெற்றிகரமாகஏவப்பட்ட அக்னி-3 குறிப்பிட்ட இலக்கு வரை சரியாக செல்லும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.
![]() |
முதலில் ஏவுகனை சோதனை வெற்றி என்று டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் அறிவிப்புவெளியிட்டிருந்தனர். ஆனால் அது தோல்வி அடைந்தது குறித்து அதிகாரப்பூர்வசெய்தி ஏதும் வெளியாகவில்லை.
அக்னி-3 செங்குத்தாக பாய்ந்தபோது, எரிபொருள் நிரப்பப்பட்ட இரண்டாவது பகுதி,ஏவுகனையிலிருந்து பிரியவில்லை. இதனால்தான் இலக்கை நோக்கி போக முடியாமல்கடலில் விழுந்து விட்டது.
அக்னி-3 ஏவுகனை 3500 கிலோமீட்டர் தொலைவு வரை பறந்து சென்று தாக்கக் கூடியவல்லமை படைத்தது. ஏவுகனை சோதனை தோல்வியில் முடிந்தாலும் கூட தவறைகண்டுபிடித்து சரி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications