பிளஸ் 2 படித்த போலி பெண் டாக்டர் கைது
Subscribe to Oneindia Tamil
பள்ளிப்பாளையம்:
திருச்சியில் போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லட்சுமி ராய் என்ற இந்தப் பெண் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருச்சி பவானி லட்சுமி நகருக்கு வந்துகுடியேறினார். காதலித்து திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே கணவனை பிரிந்த இவர் தனது கைக்குழந்தையை பெரம்பலூரில் தனது தாயார் ஜெயலட்சுமியிடம் விட்டுவிட்டு வந்துவிட்டார்.இந் நிலையில் கடந்த ஆண்டு பள்ளிபாளையம் அருகே நெசவாளர் காலனியில் வீடு பிடித்து திடீர்மருத்துவராகியுள்ளார். குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்வதாக பல பெண்களை ஏமாற்றி பணம் கறந்துள்ளார்.
இவரது போலி மருந்துகளால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட லட்சுமியிடம் போலீசார் விசாரித்தபோது, எம்ஏ லிட்ரச்சர் முடித்துவிட்டு, பிஎஸ்எம்எஸ்படித்ததாகவும், இதற்கான சான்றிதழ் இருப்தாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது தாய் ஜெயலட்சுமியிடம்விசாரித்தபோது லெட்சுமி ராய் வெறும் பிளஸ் 2 தான் படித்திருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட போலி டாக்டர் லட்சுமிராய் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications