எஸ்கேப் எஸ்.எஸ். சந்திரனுக்கு முன் ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
அதிமுக எம்.பி. எஸ்.எஸ்.சந்திரன் மற்றும் அவரது மகள் கண்மணிக்கு மதுரைஉயர்நீதிமன்றம் இன்று முன் ஜாமீன் வழங்கியது.
எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகன் தனசேகரனின் மனைவி லதா மதுரை காவல்நிலையத்தில், எஸ்.எஸ்.சந்திரன் குடும்பமும், தனது கணவரும் வரதட்சணைகொடுமை செய்ததாக கூறி புகார் கொடுத்தார்.இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன், தனசேகரன், சந்திரனின் மகள் கண்மணி உள்ளிட்ட 7பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனசேகரன், உறவினர்ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், தலைமறைவாகி விட்ட எம்பியான எஸ்.எஸ்.சந்திரன், கண்மணி ஆகியோர்முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தமனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி, விசாரணை காவல்நிலையத்தில் இருவரும் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்றும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications