மும்பை: ரயில் சேவை மீண்டும் தொடங்கியது;காயமடைந்தவர்களுக்கு சோனியா ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர்நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

Mumbai Bomb Blast
நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கி விட்டன.

குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் சோனியா காந்தி மும்பைக்குவிரைந்தார். அவருடன் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத், உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல் ஆகியோரும் மும்பைக்கு வந்தனர்.

மும்பை வந்த சோனியாவும், அமைச்சர்களும் காயமடைந்து மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினர். அதன் பின்னர் குண்டவெடிப்புநடந்த இடங்களில் ஒன்றான மாதுங்கா சாலை ரயில் நிலையத்திற்குச் சென்றுபார்வையிட்டனர்.

பின்னர் சிவராஜ் பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடே சோகத்தில்உள்ளது. இந்த பயங்கரவாத சம்பவத்தின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதற்குஅரசிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன. விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுஅவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் ஒற்றுமையுடனும், அமைதியாகவும் இருந்து சவால்களை சந்திக்க வேண்டும்என்றார் பாட்டீல்.

Mumbai Bomb Blast
அத்வானி கண்டனம்: மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, உள்நாட்டு பாதுகாப்புவிஷயத்தில் கோட்டை விட்டு விட்டது, தோல்வி அடைந்து விட்டது என்று பாஜகமூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீநகர் மற்றும் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்உள்நாட்டு பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது.

நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பும் மற்றும் அமைதி மிகவும் முக்கியம்.பாதுகாப்பும், வளர்ச்சியும் பிரிக்க முடியாதவை. இந்த சம்பவம் கடும்கண்டனத்துக்குரியது என்றார் அத்வானி.

அத்வானியும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கும் இன்று மும்பை செல்கின்றனர்.இதற்கிடையே, மும்பை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பலியானவர்களின்எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.

500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், நேற்று இரவுடன் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள், இன்றுகாலை முதல் ரயில் மீண்டும் தொடங்கியுள்ளது.

Mumbai Bomb Blast
இரவோடு இரவாக ரயில் நிலையங்களில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு,சுத்தப்படுத்தப்பட்டு இன்று காலையில் ரயில் சேவையை நடத்துவதற்குத் தயார்செய்யப்பட்டு விட்டன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயங்கத்தொடங்கியுள்ளன. மும்பைவாசிகளும், இரவில் நடந்த கொடூர சம்பவத்தை மனதில்போட்டு புதைத்தவண்ணம் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+